‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...’ - திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை நடந்தது.

Jul 7, 2025 - 18:25
 0  4
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...’ - திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. கடந்த 1-ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow