தமிழகம் முழுவதும் இருந்து வைணவ கோயில்களுக்கு 500 பக்தர்கள் ஆன்மிக பயணம்

இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் மானசரோவர் மற்​றும் முக்​தி​நாத்​துக்கு ஆன்​மிக பயணம் சென்று வருபவர்​களுக்கு ஆண்​டு​தோறும் மானி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

Sep 21, 2025 - 02:00
 0  3
தமிழகம் முழுவதும் இருந்து வைணவ கோயில்களுக்கு 500 பக்தர்கள் ஆன்மிக பயணம்

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் மானசரோவர் மற்​றும் முக்​தி​நாத்​துக்கு ஆன்​மிக பயணம் சென்று வருபவர்​களுக்கு ஆண்​டு​தோறும் மானி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், ஆடி மாதத்​தில் அம்​மன் கோயில்​களுக்​கும், புரட்​டாசி மாதத்​தில் வைணவ கோயில்​களுக்​கும், ராமேசுவரத்​திலிருந்து காசிக்​கும், அறு​படை வீடு​களுக்​கும் பக்​தர்​கள் கட்​ட​ணமில்​லாமல் ஆன்​மிக பயண​மாக அழைத்​துச் செல்​லப்​பட்டு வரு​கின்​றனர்.

அந்​தவகை​யில், இந்த ஆண்டு 2,000 பக்​தர்​கள் புரட்​டாசி மாதத்​தில் வைணவ கோயில்​களுக்கு ஆன்​மிக பயணம் அழைத்து செல்​லப்​படு​வர் என 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இந்த அறி​விப்பை செயல்​படுத்​தும் வகை​யில் முதல்​கட்​ட​மாக நேற்​று,இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் 9 மண்​டலங்​களில் இருந்து பக்​தர்​கள் வைணவ கோயில்​களுக்கு ஆன்​மிக பயணம் அழைத்து செல்​லப்​பட்​டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow