413 ரன்கள் இலக்கை விரட்டிய இந்தியா: 43 ரன்களில் ஆஸி. வெற்றி - மகளிர் கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 413 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய மகளிர் அணி விரட்டியது.

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 413 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய மகளிர் அணி விரட்டியது.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அந்த அணியின் தரப்பில் பெத் மூனி 138, ஜார்ஜியா 81, எல்லீஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 412 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.
What's Your Reaction?