காசவளநாடுபுதூர் கிராமத்தில் மொஹரம் கொண்டாடிய இந்துக்கள் - தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

காசவளநாடுபுதூர் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்தாலும், அவர்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்

Jul 7, 2025 - 18:25
 0  3
காசவளநாடுபுதூர் கிராமத்தில் மொஹரம் கொண்டாடிய இந்துக்கள் - தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

தஞ்சாவூர் அருகேயுள்ள காசவளநாடுபுதூர் கிராமத்தில், இந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடி, தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காசவளநாடுபுதூர் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்தாலும், அவர்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்து, ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், அல்லா சுவாமி என்ற பெயரில் உள்ளங்கை போன்ற உருவத்தை வைத்து, தினமும் பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்துவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow