ட்ரோன்களில் புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக ஹைலைட்ஸ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்து, யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள் எடுத்து, கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு விசேஷ பூஜைகள் நடந்தன. காலை 6.22 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
What's Your Reaction?