திருவூடல் - மறுவூடல் திருவிழா கோலாகலம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற திருவூடல் - மறுவூடல் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்றார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற திருவூடல் - மறுவூடல் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்றார்.
சிவபெருமானை மட்டும் பிருங்கி மகரிஷி வணங்கியதால் பார்வதி சினம் கொண்டார். இதனால், சுவாமியுடன், அம்பாளுக்கு ஊடல் ஏற்படுகிறது. இதையொட்டி, திருவூடல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு திருவூடல் திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. சுவாமியுடன் ஊடல் அதிகமானதால் கோயிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள தனது சந்நிதிக்கு சென்ற அம்பாள், தாழிட்டுக் கொள்கிறார். சுவாமியும் குமரக் கோயிலுக்கு சென்றுவிடுகிறார். இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
What's Your Reaction?