ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை: இன்று திருமங்கை மன்னன் வேடுபறி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயி​லில் வைகுண்ட ஏகாதசிப்  பெரு​விழா​வில் ராப்​பத்து உற்சவத்​தின் 7-ம் நாளான நேற்று நம்பெரு​மாள் திருக்கைத்தல சேவை நடைபெற்​றது

Jan 17, 2025 - 03:00
 0  3
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை: இன்று திருமங்கை மன்னன் வேடுபறி

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயி​லில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா​வில் ராப்​பத்து உற்சவத்​தின் 7-ம் நாளான நேற்று நம்பெரு​மாள் திருக்கைத்தல சேவை நடைபெற்​றது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெரு​மாள் மூலஸ்​தானத்​திலிருந்து புறப்​பட்டு சொர்க்க வாசலை கடந்​தார்.

பின்னர் அங்கிருந்து புறப்​பட்டு மாலை 5.45 மணிக்கு திரு​மாமணி மண்டபத்தை வந்தடைந்​தார். அங்கு திருக்கைத்தல சேவை (நம்​மாழ்​வார் பராங்குச நாயகியான திருக்​கோலத்​தில்) நடைபெற்​றது. அதன்​பின், உபயதாரர் மரியாதை​யுடன் பொது ஜனசேவை நடைபெற்​றது. இரவு 11.30 மணிக்கு திரு​மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு வீணை வாத்​தி​யத்​துடன் நம்பெரு​மாள் மூலஸ்​தானம் சென்​றடைந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow