திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7-ல் காலை 6.15 - க்கு கும்பாபிஷேகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் என்று கோயில் நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது.

Jun 7, 2025 - 07:20
 0  4
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7-ல் காலை 6.15 - க்கு கும்பாபிஷேகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தூத்​துக்​குடி: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் என்று கோயில் நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது. அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடத்த அறநிலை​யத்​துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

இதில், கும்​பாபிஷேகம் நடத்​து​வதற்​கான நேரத்தை முடிவு செய்​வ​தில் கோயில் நிர்​வாகம் மற்​றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறு​பாடு நிலவி வந்​தது. இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தொடரப்​பட்​டு, உச்ச நீதி​மன்​றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்​களுக்கு முன்பு தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், திருச்​செந்​தூர் கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடக்​கும் நேரத்தை கோயில் நிர்​வாகம் நேற்று மாலை அறி​வித்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow