ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு ராமநாத சுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் நந்திகேசுவரர் மண்டபத்துக்கு எழுந்தருளினர்.
What's Your Reaction?