சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்தி நடைதிறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார்: பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்தியான அருண்குமார் நம்பூதிரி இன்று (நவ.16) அதிகாலை நடை திறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நீண்டவரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஆர்வமுடன் ‘புலிவாகனனை’ தரிசனம் செய்தனர்.

Nov 16, 2024 - 16:50
 0  14
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்தி நடைதிறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார்: பக்தர்கள் தரிசனம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்தியான அருண்குமார் நம்பூதிரி இன்று (நவ.16) அதிகாலை நடை திறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நீண்டவரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஆர்வமுடன் ‘புலிவாகனனை’ தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று (நவ.15) மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி மகேஷ்நம்பூதிரி நடை திறந்து விபூதி பிரசாதங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மஞ்சள்மாதா, கணபதி, நாகராஜா உள்ளிட்ட பரிவார கோயில்களின் சந்நதிகளும் திறக்கப்பட்டன. பின்பு ஐயப்பன் கோயிலில் இருந்து விளக்கு எடுத்துச் செல்லப்பட்டு 18-ம்படிக்கு கீழ்பதியில் உள்ள கற்பூர ஆழியில் ஜோதி ஏற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow