மகா சிவராத்திரி: ஈஷா சார்பில் ரத யாத்திரை சேவை தொடக்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா சார்பில் ரத யாத்திரை சேவை தொடங்கியது.

Dec 23, 2024 - 20:45
 0  4
மகா சிவராத்திரி: ஈஷா சார்பில் ரத யாத்திரை சேவை தொடக்கம்

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா சார்பில் ரத யாத்திரை சேவை தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷாவின் தென் கயிலாய பக்தி பேரவையின் சார்பில், ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது. ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நடப்பாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளில் பயணிக்க உள்ளன. மகா சிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் இந்த ரதங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளன. இதன் தொடக்க விழா கோவை ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று வடக்கு, மேற்கு திசைகள் நோக்கிச் செல்லும், ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow