மானசரோவர், முக்திநாத் ஆன்மிகப் பயணம் - அரசு மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம், என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024-25 ஆம் நிதியாண்டில் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வந்தவர்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கப்படும் அரசு மானியத்தை பெற விண்ணப்பிக்கலாம்.
What's Your Reaction?