மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க அரசு முடிவு: அமைச்சர் ஆய்வு
கோவை மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் இன்று (ஜன.27) ஆய்வு செய்தனர்.

கோவை: கோவை மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் இன்று (ஜன.27) ஆய்வு செய்தனர்.
கோவை மருதமலை முருகன் கோயிலில், அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 160 அடி உயரத்தில் கல்லினால் ஆன முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளனர். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மருதமலை முருகன் கோயிலில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று மாலை (ஜன.27) ஆய்வு செய்தார்.
What's Your Reaction?