திருச்செந்தூர் மாசி திருவிழாவில் பச்சை சார்த்தி சுவாமி வீதி உலா: தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சார்த்திய கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.
What's Your Reaction?