சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவை மத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

Jan 11, 2025 - 17:30
 0  4
சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

டாக்கா: சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவை மத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த 2024 ஆகஸ்ட்டில் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அப்போது, அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக வங்கதேச இந்து பவுத்த ஒற்றுமை கவுன்சில் அளித்த புகாரின் பேரில் வங்கதேச காவல் துறை ஓர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், "ஆகஸ்ட் 2024-ல் மொத்தம் 1,769 வகுப்புவாத தாக்குதல்கள் நடந்ததாக இந்து பவுத்த ஒற்றுமை கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான வழக்குகள் மத ரீதியிலானவை அல்ல; அரசியல் ரீதியிலானவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow