சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தேர்த் திருவிழா நாளையும் (ஜன.12) , தரிசன விழா நாளை மறுநாளும் ( ஜன13) நடைபெறுகிறது. இதனையொட்டி நடராஜர் கோயில் கடந்த 4-ம் தேதி தேதி கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவிழாவை காரணம் காட்டி கோயில் தீட்சிதர்கள் கனகசபையில் வழிபட பக்தர்களை அனுமதிக்க சிரமம் ஏற்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு கோயில் தீட்சிதர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா என்பவர் கனகசபையில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எந்த தடையும் இன்றி வழிபட்டு வந்தனர்.
What's Your Reaction?