சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வேம்பத்தூரில் 1,000 ஆண்டு சிவன் கோயில்!
மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததுபோல், சிவகங்கை அருகே வேம்பத்தூரிலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர்கள் நிறைந்திருந்த ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் ஆவுடைநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததுபோல், சிவகங்கை அருகே வேம்பத்தூரிலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர்கள் நிறைந்திருந்த ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் ஆவுடைநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பெருவழிப்பாதையில் அமைந்துள்ள வேம்பற்றூர் (வேம்பத்தூர்), அரசாண்ட மன்னர்களின் ஆட்சிக்கேற்றவாறு ஊரின் பெயரும் மாற்றம் பெற்றுள்ளது. அவ்வாறு கி.பி.1050-ல் உத்தமசோழ சதுர்வேதிமங்கலம், கிபி.1118-1135-ல் விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம், கிபி.1300-ல் குலசேகர சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களில் ஒருவர், குழந்தைப்பேறு வேண்டி இங்கு வந்து புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவபெருமானை வழிபட்டார். அதன்படி, குழந்தைப்பேறு கிடைத்த மன்னன், இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் கற்றளியில் கோயில் எழுப்பி, கோயிலின் எதிரே குளத்தையும் ஏற்படுத்தினார்.
What's Your Reaction?