15 பேருக்கு வேலை | வாழ்ந்து காட்டுவோம்!
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில் வசிக்கிறார் செண்பகவள்ளி.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில் வசிக்கிறார் செண்பகவள்ளி. கடந்த 5 வருடங்களாகப் புடவைகளுக்கு பாலீஷ் போடும் வேலையைச் செய்துவருகிறார். இதில் குறைவான வருமானமே கிடைத்துவந்தது.
இந்நிலையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் இணை மானியத் திட்டத்தில் மானியத்துடன் கூடிய தொழில் கடன் கிடைப்பது (MGP கடன்) தொழில் சார் சமூக வல்லுநர் மூலமாகத் தெரிந்தது. அதன் பின் வட்டார அலுவலகம் சென்று விவரங்களைத் தெரிந்துகொண்டு MGP கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தார். மாவட்ட அளவிலான பணிக்குழுக் கூட்டத்தில் இவரது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு மாநில அலுவலர்களால் நேர்காணல் செய்யப்பட்டுத் தேர்வானார்.
What's Your Reaction?