இசைஞானியின் பிரியத்துக்குரியவர்! | கண்ணன் நாராயணன் நேர்காணல்
தமிழ் சினிமாவைக் கீழே தள்ளிய கிளிஷேக்கள், மிகைப்படுத்தல்களால் மலிந்த ஹீரோயிசம் ஆகியவற்றை அடித்துத் துவைத்து பகடி செய்து ஹிட்டடித்த படம், சி.எஸ்.அமுதனின் ‘தமிழ் படம்’.

தமிழ் சினிமாவைக் கீழே தள்ளிய கிளிஷேக்கள், மிகைப்படுத்தல்களால் மலிந்த ஹீரோயிசம் ஆகியவற்றை அடித்துத் துவைத்து பகடி செய்து ஹிட்டடித்த படம், சி.எஸ்.அமுதனின் ‘தமிழ் படம்’. அந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கண்ணன் நாராயணன். அந்தத் ‘தமிழ் பட’த்தில் இடம்பெற்ற இவரது ‘ஓ மக ஸியா’ பாடல் ஒரு தனித்த சாதனை. சத்தமே இசையென்றாகிப் போன புத்தாயிரத்தின் திரையிசையில் இவரது மெலடிகளை எப்போது கேட்டாலும் மெய் மறந்துவிடலாம்.
‘தலைக்கூத்தல்’ போன்ற உணர்வு நிரம்பிய தரமான சினிமாக்கள், ‘காதல் என்பது பொதுவுடைமை’ போன்ற துணிச்சலான முயற்சிகள், ‘ரத்தம்’ போன்ற மாஸ் சினிமாக்கள் எனக் களம் எதுவானாலும் தன் பாடல்கள், பின்னணி இசையால் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உணர்வுப் பரிமாணம் கொடுக்கும் இன்னிசை மழை இவருடையது.
What's Your Reaction?