ராமநாதபுரம் அருகே ‘பர்மா விநாயகர்’ கோயில்!
ராமநாதபுரம் அருகே 100 ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

பர்மாவிலிருந்து கடல் பயணத்தின்போது வழித்துணையாக கொண்டு வரப்பட்ட விநாயகருக்கு ராமநாதபுரம் அருகே 100 ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழர்கள் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தில் தங்களின் வழித்துணையாக விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச்சென்ற விநாயகர் சிலைகளைக் கொண்டே அவர்கள் சென்ற நாடுகளில் கோயில் கட்டியுள்ளனர். இதனால் விநாயகர் வழிபாடு பரவலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் காணப்படுகிறது.
What's Your Reaction?