காரியத் தடைகள் யாவும் விலகிட சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!
விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி இன்னும் சிறப்பானது. இந்த நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

பொதுவாகவே, விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி இன்னும் சிறப்பானது. இந்த நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
அப்போது, பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதிக்கு வெள்ளெருக்கம்பூ மாலையும், அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். காரியத் தடைகள் யாவும் விலகி விடும் என்கிறார்கள்.
What's Your Reaction?