அருப்புக்கோட்டையில் அருள்பாலிக்கும் ஆயிரங்கண் மாரியம்மன்!
நூற்றாண்டைக் கடந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது அருப்புக்கோட்டையில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாவாடித்தோப்பில் அமைந்துள்ளது ஆயிரங்கண் மாரியம்மன் கோயில்.

நூற்றாண்டைக் கடந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது அருப்புக்கோட்டையில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாவாடித்தோப்பில் அமைந்துள்ளது ஆயிரங்கண் மாரியம்மன் கோயில்.
நூறாண்டுக்கு முன்பு எழுப்பப்பட்டது இக்கோயில். இக் கோயில் வடக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளதோடு, கோயிலின் பின்புறம் தெப்பமும் அமைந்துள்ளது. எனவே, இக்கோயில் தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுவது உண்டு. கோயிலின் முன்புறம் பலி பீடம், கொடி மரம், சிம்ம வாகனம் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன.
What's Your Reaction?