ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு ஊஞ்சல் உற்சவம் அக்.20 அன்று தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்துக்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
What's Your Reaction?