தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆதீனங்கள் வாழ்த்து

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த ஆதீனங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Nov 11, 2024 - 15:43
 0  5
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆதீனங்கள் வாழ்த்து

கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த ஆதீனங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை நாளை (31 ஆம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையைச் சேர்ந்த ஆதீனங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோவை சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தீபங்களின் வரிசை தீபாவளி. குறிப்பாக, தமிழர்கள் கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று, அதற்கு முன்பு ஒருநாள், அதற்கு பின்னர் ஒருநாள் தீபங்களை வீடுகளில் ஏற்றி வைத்துக் கொண்டாடுவதே தீபாவளி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow