உழைப்பு என்ன தரும்? | கதை
பூவரசங்காட்டில் பறவைகள் மட்டுமே வசித்துவந்தன. கழுகு அந்தக் காட்டுக்கு அரசனாக இருந்தது. செழிப்பாக இருந்த பூவரசங்காட்டில் கடந்த ஓர் ஆண்டாக மழையே இல்லை.

பூவரசங்காட்டில் பறவைகள் மட்டுமே வசித்துவந்தன. கழுகு அந்தக் காட்டுக்கு அரசனாக இருந்தது. செழிப்பாக இருந்த பூவரசங்காட்டில் கடந்த ஓர் ஆண்டாக மழையே இல்லை. மரம் செடி கொடிகளுக்குப் போதிய நீர் கிடைக்காததால் அவை வாட ஆரம்பித்தன. குளங்களிலும் ஆறுகளிலும் நீர் வற்றத் தொடங்கியது.
பறவைகள் அனைத்தும் கழுகிடம் வந்து தண்ணீர்ப் பஞ்சம் பற்றி முறையிட்டன. “அன்பர்களே, மழை பெய்வது நம் கையில் இல்லை. அதனால் தண்ணீர்த் தேவையை நாம் எப்படிப் பூர்த்தி செய்வது என்று சொல்லுங்கள்” என்றது கழுகு.
What's Your Reaction?