இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்தும் தொடர்நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் செப்.22-ம் தேதி முதல் அக்.1-ம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
What's Your Reaction?