மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

Nov 17, 2025 - 07:05
 0  5
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

குமுளி: மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ல் நடை​பெறும் மண்டல பூஜையை முன்​னிட்டு நேற்று மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. மேல்​சாந்தி அருண்​கு​மார் நம்​பூ​திரி தீபம் ஏற்​றி, மங்கல இசை முழங்க நடையைத் திறந்து வைத்​தார். பின்​னர், 18-ம் படி வழியே கீழிறங்கி ஆழிக்​குண்​டத்​தில் தீபம் ஏற்​றி​னார்.

அருண்​கு​மார் நம்​பூ​திரி​யின் பணிக்​காலம் இன்​றுடன் முடிவடைந்​த​தால், சபரிமலை மற்​றும் மாளி​கைபுரம் கோயில்​களுக்கு புதி​தாக தேர்வு செய்​யப்​பட்ட மேல்​சாந்​தி​கள் பிர​சாத் நம்​பூ​திரி, மனு நம்​பூ​திரி ஆகியோரை பொறுப்​பேற்​கச் செய்​யும் வகை​யில் அவர்​களின் கையைப் பிடித்து 18-ம்​படி வழியே சந்​நி​தானத்​துக்கு அழைத்து வந்​தார். அங்கு இரு​வருக்​கும் விபூ​திப் பிர​சாதம் வழங்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow