வானவில்லுக்கு வண்ணம் தீட்டியது யார்?

அழகான கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வந்தனர் பூங்கோதையும் அவள் தம்பி முத்துவும். முத்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன். அவனால் முழுமையாகப் பேச முடியாது. ஓர் இடத்தில் உட்காரவும் மாட்டான். துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருப்பான்.

Sep 10, 2025 - 12:55
 0  3
வானவில்லுக்கு வண்ணம் தீட்டியது யார்?

அழகான கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வந்தனர் பூங்கோதையும் அவள் தம்பி முத்துவும். முத்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன். அவனால் முழுமையாகப் பேச முடியாது. ஓர் இடத்தில் உட்காரவும் மாட்டான். துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருப்பான்.

அவர்கள் வீட்டின் பின்னால் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே நிறைய பூச்செடிகள் இருந்தன. முத்துவுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்கு வண்ணங்களின் மீது எப்போதும் ஆர்வம் இருந்தது. அதனால் பூத்து நிற்கும் மலர்களின் அருகே சுற்றிக்கொண்டிருப்பான். பூங்கோதைக்கும் அவள் வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் விதவிதமான செடிகளுடன் பேசுவதும் பாடுவதும் பிடிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow