ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்க டிச.16 கடைசி நாள்: அறநிலையத்துறை
ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் 420 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க டிச.16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்: ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் 420 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க டிச.16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து, காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள், ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவர் என்றும், இதற்கான செலவினத் தொகையை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
What's Your Reaction?