சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: தேவஸ்வம் போர்டு அமைச்சர் அறிவிப்பு
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் அறிவித்துள்ளார்.

கோட்டயம்: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள அமைச்சர் வாசவன் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு அளிக்கப்படும். ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் இந்த தொகையை திருவாங்கூர்தேவஸ்வம் போர்டு வழங்கும். அத்துடன், உயிரிழப்பவரின்
உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்வம் போர்டு செய்து கொடுக்கும்.
What's Your Reaction?