ராமபிரானின் அருள் பெறுவோம்! | மார்கழி மகா உற்சவம் 12
அதிகாலை வேளையில் எருமைகள் பால் சொரிந்து ஆண்டாளின் தோழியின் வீட்டு வாசல் சேறாகி விட்டது. அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத, தோழிகள், வெளியில் இருந்தபடியே, “கொட்டும் பனியில் உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.

கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி |
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர ||
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! |
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் ||
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற |
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் ||
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம் |
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 12)
What's Your Reaction?