மன்மோகன் சிங் மறைவு: ஆஸி.யில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. 

Dec 27, 2024 - 15:20
 0  4
மன்மோகன் சிங் மறைவு: ஆஸி.யில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி

மெல்பர்ன்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்-க்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.” என்று தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow