மேரி கியூரி | விஞ்ஞானிகள் - 7
அறிவியலாளர் பியரி கியூரியின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய ஆய்வகத்தைச் சில காலம் பயன்படுத்திக்கொண்டார் மேரி. சில ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வேலை பார்த்துக்கொண்டு தங்கள் ஆய்வகப் பணியைத் தொடர்ந்தார்கள். மேரி தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக யுரேனியத்தை எடுத்துக்கொண்டார். மேரியும் பியரியும் ஒரு தனிமத்தைக் கண்டறிந்தனர். போலந்தின் நினைவாக ’பொலேனியம்’ என்று பெயர் வைத்தார் மேரி. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1903ஆம் ஆண்டு மேரி, பியரி, ஹென்றி பெக்குரேல் ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

நோபல் வரலாற்றில் நோபல் பரிசு வென்ற முதல் பெண். இரண்டு நோபல் பரிசுகளை வென்ற முதல் பெண். இரண்டு அறிவியல் துறைகளில் நோபல் பரிசு வென்ற முதல் பெண் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர் மேரி கியூரி.
1867, நவம்பர் 7 அன்று போலந்தில் பிறந்தார் மரியா சலோமியா ஸ்க்ளோடோவ்ஸ்கா. செல்லப் பெயர் மேரி. சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தார். ஆசிரியரான தந்தை, தம் குழந்தைகளுக்குப் பாடங்களைத் தாண்டியும் அறிவைப் புகட்டி வந்தார். தங்கப் பதக்கத்துடன் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வந்தார் மேரி.
What's Your Reaction?