மஹா சிவராத்திரி: டிச.11 முதல் பிப்.26 வரை தமிழகம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, டிச.11-ம் தேதி தொடங்கி பிப்.26ம் தேதி வரை 2 மாத காலம் ஈஷா யோக மையத்தின் ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

சென்னை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, டிச.11-ம் தேதி தொடங்கி பிப்.26ம் தேதி வரை 2 மாத காலம் ஈஷா யோக மையத்தின் ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ளது. சென்னையில் வரும் டிச.30 முதல் ஜன.10 வரை ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் ரத யாத்திரை நடைபெறும், என்று தென் கைலாய பக்தி பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை ஈஷா யோக மையத்தின் 31-வது மஹா சிவராத்திரி விழா வரும் பிப்.26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென் கைலாய பக்தி பேரவையின் சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன், சீனிவாசன், இந்து ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
What's Your Reaction?