பெண் எனும் உரைவாள்! - ஜென்டில்வுமன் திரைப் பார்வை
முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அரவிந்த் (ஹரிகிருஷ்ணன்) - பூரணி (லிஜோமோள்) இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்திருமணம் முடித்த தம்பதி. நன்றாகப் போய்க் கொண்டிருந்த நாள்களில் ஓர் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டு கணவனைக் கொன்றுவிடுகிறார் பூரணி.

முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அரவிந்த் (ஹரிகிருஷ்ணன்) - பூரணி (லிஜோமோள்) இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்திருமணம் முடித்த தம்பதி. நன்றாகப் போய்க் கொண்டிருந்த நாள்களில் ஓர் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டு கணவனைக் கொன்றுவிடுகிறார் பூரணி.
ஆனால், பதற்றமடையாமல் சடலத்தை வீட்டின் குளிர் பதனப் பெட்டி யில் ஒளித்து வைக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியாமல் இருக்கும் அவரின் வீட்டுக் கதவை தட்டுகிறார் அன்னா (லாஸ்லியா) என்கிற பெண். அவரைத் தொடர்ந்து போலீஸும் வருகிறது. அன்னா யார்? அவரையும் போலீஸையும் பூரணியால் சமாளிக்க முடிந்ததா என்பது படம்.
What's Your Reaction?