தனி சிறப்பு தரும் சுக்கிர ஓரை பெருமாள் பூஜை!

பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர ஓரையில் ரங்கநாதருக்கு சிறப்பு பூஜை, எழுத்தாணிக்காரத் தெருவில் எழுந்தருளியுள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

Jan 3, 2025 - 18:15
 0  5
தனி சிறப்பு தரும் சுக்கிர ஓரை பெருமாள் பூஜை!

பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர ஓரையில் ரங்கநாதருக்கு சிறப்பு பூஜை, எழுத்தாணிக்காரத் தெருவில் எழுந்தருளியுள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

சித்திரை மாதம் பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க அழகர்மலையிலிருந்து புறப்பட்டு, மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் எதிர்கொண்டு வரவேற்பது எழுத்தாணிக்காரத் தெருவிலுள்ள வீரராகவப் பெருமாள்தான். சிறப்புக்குரிய வீரராகவப் பெருமாள் கோயிலில் மூலவராக வீரராகவப் பெருமாளும், கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow