புராணங்களில் மதுரையும், மீனாட்சி அம்மன் கோயிலும்!

மதுரை மாநகரும், மீனாட்சி அம்மன் கோயிலும் புராணங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக, பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Dec 27, 2024 - 19:20
 0  3
புராணங்களில் மதுரையும், மீனாட்சி அம்மன் கோயிலும்!

மதுரை மாநகரும், மீனாட்சி அம்மன் கோயிலும் புராணங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக, பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, மீனாட்சி அம்மன் கோயில் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் அம்பை மணிவண்ணன் கூறியதாவது: மதுரை கோயிலோடு தொடர்புடைய தல புராணம் திருவிளையாடற் புராணம். இதில், மதுரை மற்றும் கோயிலின் தோற்றம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. விருத்திராசுரன் என்ற அசுரன் தேவர்களுக்கும்,தேவர்களின் தலைவரான இந்திரனுக்கும் மிகவும் தொல்லைகள் தந்துள்ளான். இந்திரன் விருத்திராசுரனை அழிக்க முற்பட்டார். இந்திரனிடம் இருந்து தப்பிய அசுரன் ஒரு மலையில் சென்று மறைவான இடத்தில் தவம் செய்து வந்தான். அவனைத் தேடிப்பிடித்த இந்திரன் அவன் தவத்தில் இருந்ததை கருதிப் பார்க்காது, அவனை கொன்றான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow