மைக்கேல் ஃபாரடே | விஞ்ஞானிகள் - 14
வேதியியலாளராகவும் இயற்பியலாளராகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்தவியல், மின்வேதியியல் துறைகளில் இவர் அளித்த பங்களிப்பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

வேதியியலாளராகவும் இயற்பியலாளராகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்தவியல், மின்வேதியியல் துறைகளில் இவர் அளித்த பங்களிப்பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
1791, செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் ஃபாரடே. தந்தை குதிரைக்கு லாடம் அடிப்பார். அந்த வருமானத்தில் தந்தையால் ஃபாரடேவுக்குக் கல்வியை அளிக்க இயலவில்லை. அதனால் அவரே தன் கல்வியைப் பார்த்துக்கொண்டார். 14 வயதில் புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலை முடித்து வீட்டிற்கு வந்தால், படித்த அறிவியல் சோதனைகளைச் செய்து பார்ப்பார். இப்படி அறிவியல் அறிவைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.
What's Your Reaction?