பாரதியின் சக்தியே பராசக்திதான்!
மகாகவி பாரதியாரை பன்மொழிப் புலமை வாய்ந்தவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, கட்டுரையாளராக, தேசபக்தராக பல பரிமாணங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால், பாரதியாரின் இத்தனைப் பரிமாணங்களுக்கும் `ஆதாரமாக இருப்பது எது?' என்னும் கேள்விக்கான பதிலைத் தருகிறது `சக்திதாசன்' என்னும் ஆவணப்படம்.

மகாகவி பாரதியாரை பன்மொழிப் புலமை வாய்ந்தவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, கட்டுரையாளராக, தேசபக்தராக பல பரிமாணங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால், பாரதியாரின் இத்தனைப் பரிமாணங்களுக்கும் `ஆதாரமாக இருப்பது எது?' என்னும் கேள்விக்கான பதிலைத் தருகிறது `சக்திதாசன்' என்னும் ஆவணப்படம்.
ஆன்மிகத்தின் துணை கொண்டு குறுக்குவெட்டாக பாரதியின் வாழ்க்கையை நமக்குத் தரிசனப்படுத்துவதுதான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பு. பாரதியார் 16 வயதிலேயே எட்டயபுரம் அஷ்டமூர்த்தீஸ்வரரின் பெயரில் `இளசை ஒரு பா; ஒரு பஃது' என்னும் அரிய இலக்கண வகைமையில் செறிவான வெண்பாவால் பிரபந்தம் பாடியிருப்பது, காசியில் முதன் முதலாக கோயிலில் ருத்ர வடிவில் காளியைக் கண்டது, அங்கு காளிதேவிக்கு பலியிடப்படும் எருமைகள், தாமசம் என்னும் குணத்தின் குறியீடு எருமை. எனில், தாமசம் குணத்தைத்தானே பலியிட வேண்டும் என்னும் பாரதியின் சிந்தனையும் இதில் பதிவாகியிருக்கிறது.
What's Your Reaction?