உயிரின் உயிரே உயிரின் உயிரே | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 31
இறைவனின் வடிவத்தால் ஆட்கொள்ளப்படுவதைக் காட்டிலும் அவனது கல்யாண குணங்களால் ஆட்கொள்ளப்படுவதே சிறந்தது என கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், அவன் அருங்குணங்களுக்குப் பற்றுக்கோடாய் இருப்பது அவன் திருவடிவம்.

இறைவனின் வடிவத்தால் ஆட்கொள்ளப்படுவதைக் காட்டிலும் அவனது கல்யாண குணங்களால் ஆட்கொள்ளப்படுவதே சிறந்தது என கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், அவன் அருங்குணங்களுக்குப் பற்றுக்கோடாய் இருப்பது அவன் திருவடிவம். அந்த வடிவத்தின் துணையின்றி இறைவனின் குணங்களை நம்மால் முழுமையாகத் துய்த்து மகிழ முடியாது.
இதை நன்கறிந்திருந்த நம்மாழ்வார் முதலில் திருமாலின் குணக்கடலில் தோய்ந்தாடி பின்னர் அவன் வடிவழகில் நீராட விரும்பினார். உண்மையில் இறைவனின் திவ்யாத்ம ஸ்வரூபத்தைத் தான் நம்மாழ்வார் வர்ணிக்கிறார். அதைத் திருவடிவம் என்று கூறுவது ஓர் உபசார வழக்கு.
What's Your Reaction?