பறந்த நாவல் பழங்கள்! | கதை
“என்ன வெட்டுக்கிளியே, ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்” என்று நலம் விசாரித்தது ஓணான். “உனக்கு என்ன ஞாபக மறதியா? காலையில் தானே அந்த எருக்கஞ்செடி மேல உட்கார்ந்து எருக்கம் பூக்களை டப்பு டப்புனு வெடிச்சிட்டு இருந்தோம்.

“என்ன வெட்டுக்கிளியே, ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்” என்று நலம் விசாரித்தது ஓணான். “உனக்கு என்ன ஞாபக மறதியா? காலையில் தானே அந்த எருக்கஞ்செடி மேல உட்கார்ந்து எருக்கம் பூக்களை டப்பு டப்புனு வெடிச்சிட்டு இருந்தோம். அதுக்குள்ள மறந்துட்டியா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டது வெட்டுக்கிளி.
“நான் அப்பவே சொன்னேன், அந்த நாவல்காட்டுப் பக்கம் போகாதேன்னு. அங்கே போனவங்களுக்கு இப்படித்தான் அடிக்கடி மறதி வருமாம்'' என்றது பச்சைப் பாம்பு. “அச்சச்சோ! ஓணானைப் பழைய நிலைக்கு எப்படிக் கொண்டு வருவது?” என்று வெட்டுக் கிளியையும் பச்சைப் பாம்பையும் பயத்துடன் பார்த்தது பொன்வண்டு.
What's Your Reaction?