பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தில், அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கும் அன்னை, விஷ்ணு துர்க்கை, துர்கா லட்சுமி, நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவக்கிரஹ நாயகி, நவராத்திரி நாயகி, நவகோடி நாயகி எனவும் போற்றப்படுகிறாள்.

தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தில், அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கும் அன்னை, விஷ்ணு துர்க்கை, துர்கா லட்சுமி, நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவக்கிரஹ நாயகி, நவராத்திரி நாயகி, நவகோடி நாயகி எனவும் போற்றப்படுகிறாள்.
ராஜராஜசோழன் முதலான சோழ மன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள்வாக்குப் பெற்றுச் செல்வது வழக்கம்.
சோழ மன்னர்களின் ஆட்சி முடிவுற்று, சோழன் மாளிகை முற்றிலும் அழிந்து விட்ட நிலையில், துர்க்கையம்மன், விநாயகர், சண்முகர், பைரவர் ஆகிய 4 தெய்வத் திருமேனிகளையும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலின் வடக்கு வாயிலில் தனி சந்நிதி பெற்று, பக்தர்களைக் காக்கும் அன்னையாக, சாந்த சொரூபத்துடன் துர்க்கையம்மன் விளங்குகிறாள்.
What's Your Reaction?