பிரம்மோற்சவ விழாவில் 60 டன் மலர்களால் அலங்காரம்: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவுக்காக ரூ.3.5 கோடி செலவில் 60 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவுக்காக ரூ.3.5 கோடி செலவில் 60 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிஅனில்குமார் சிங்கால் தலைமையில் திருமலையில் நேற்று நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளன. ஆகம சாஸ்திர விதிகளின்படி கடந்த செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. வாகனங்களின் மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன. முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 24-ம் தேதி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். அன்று மாலை கொடியேற்றத்துடன் ஏழுமலையானின் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
What's Your Reaction?