நிழற்குடைக்குள் நூலகம் - தஞ்சாவூரில் அசத்தல் முன்முயற்சி!

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

Nov 11, 2024 - 16:08
 0  4
நிழற்குடைக்குள் நூலகம் - தஞ்சாவூரில் அசத்தல் முன்முயற்சி!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலுள்ள ஆலமரம் பேருந்து நிறுத்தத்தில் தஞ்சாவூர் இன்னர்வீல் சங்கம் சார்பில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்தார்.

மேலும், இந்த நிழற்குடையில் அலமாரியுடன் கூடிய நூலக வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 நாளிதழ்கள், வார இதழ்கள், ஏறத்தாழ 20 சிறுகதை நூல்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தஞ்சாவூர் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக இந்நிழற்குடையில் நூலக வசதி செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow