கொம்பூதும் கலையை மீட்டெடுக்கும் ‘வேம்பத்தூர் வேலு’!

பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக கொம்பூதும் கலை உள்ளது. பழங்காலத்தில் விலங்குகள், பறவைகளை விரட்டவே கொம்பூதி வந்துள்ளனர். மன்னர் காலங்களில் போர் அறிவிப்பு கருவியாகவும் இருந்துள்ளது.

Nov 11, 2024 - 16:08
 0  4
கொம்பூதும் கலையை மீட்டெடுக்கும் ‘வேம்பத்தூர் வேலு’!

சிவகங்கை: பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக கொம்பூதும் கலை உள்ளது. பழங்காலத்தில் விலங்குகள், பறவைகளை விரட்டவே கொம்பூதி வந்துள்ளனர். மன்னர் காலங்களில் போர் அறிவிப்பு கருவியாகவும் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் கொம்பூதி வந்துள்ளனர்.

கிராமங்களில் குறிப்பிட்ட சிலருக்கான கலையாக மட்டுமே இருந்துள்ளது. அவர்கள் மட்டுமே பரம்பரை, பரம்பரையாக பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் அவர்களது வாரிசுகள் இக்கலையை கற்காமல் போனதால், அழியத் தொடங்கியது. இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் இக்கலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரைச் சேர்ந்த எஸ்.வேலு (62).

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow