தேனி அருகே சித்திரகுப்தனுக்கு தனி கோயில் - சிறப்பு என்ன?
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களுக்கு ஏற்ப மேலோகத்தில் பலன் உண்டு என்பது இந்து தர்மம்.

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களுக்கு ஏற்ப மேலோகத்தில் பலன் உண்டு என்பது இந்து தர்மம். இதற்காக, ஒவ்வொருவரின் பாவ, புண்ணியக் கணக்குகள் எழுதப்பட்டுக் கொண்டே வருகின்றன. எமனின் உதவியாளரான சித்திரகுப்தன்தான் இந்த கணக்குகளை கவனிக்கும் உயர் அதிகாரி. எந்த பாரபட்சமும் இன்றி, ஒவ்வொருவரின் கணக்கிலும் இவரின் பதிவுகள் ஏற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த ‘கணக்காளருக்கு’ தேனிக்கு அருகே தனி கோயில் உள்ளது.
தேனி - போடி சாலையில் 7 கி.மீ. தொலைவில் கோடாங்கிபட்டி அருகே தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில்தான் சித்திரகுப்தன் அருள்பாலித்து வருகிறார்.
What's Your Reaction?