எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு | விஞ்ஞானிகள் - 25
1898இல் யுரேனியம் கதிர்வீச்சில் ஆல்பா, பீட்டா கதிர்கள் இருப்பதையும் அவற்றின் பண்புகளையும் கண்டறிந்தார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உள்பட பல கருவிகளை உருவாக்கினார். ரூதர்ஃபோர்டின் திறமையை அறிந்த கனடா, தங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் இயற்பியல் மேடையை ஒதுக்கிக் கொடுத்தது. பல ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

உலகப் புகழ்பெற்ற அணு இயல் விஞ்ஞானி ரூதர்ஃபோர்டு. அணுவை ஆய்வு செய்ததோடு அணுவைப் பிளக்கவும் முடியும் என்கிற கருதுகோளுக்கும் வித்திட்டவர்.
1871, ஆகஸ்ட் 30 அன்று நியூசிலாந்தின் பிரைட்வாட்டர் என்கிற இடத்தில் பிறந்தார் ரூதர்ஃபோர்டு. பன்னிரண்டு பிள்ளைகளில் நான்காவது குழந்தை இவர். எளிய விவசாயக் குடும்பம். ரூதர்ஃபோர்டு அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். அம்மா ஆசிரியராக இருந்ததால், கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லியே வளர்த்தார். ரூதர்ஃபோர்டுக்கும் படிப்பின் மீது ஆர்வம் அதிகமாகவே இருந்தது. 10 வயதில் அறிவியல் புத்தகம் ஒன்றைக் கண்டார். அந்தப் புத்கத்தைப் பார்த்துப் பரிசோதனைகளை மேற்கொண்டார். அவற்றைக் கண்ட குடும்பத்தினர் ரூதர்ஃபோர்டு குறித்துப் பெருமிதம் கொண்டனர்.
What's Your Reaction?