துயரத்தில் இருந்து விடுபட்டு மன அமைதி பெற பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் அவசியம்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவுறுத்தல்
திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது

சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அதில் இருந்து விடுபட்டு மன அமைதி பெற, பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருப்பதி லட்டு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்தது என்பதை அறிந்து மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதில்இருந்து அவர்கள் விடுபட வேண்டும். அவர்கள் மனது அமைதி பெற வேண்டும்.
What's Your Reaction?