தீவினைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் காவல் தெய்வம் கருப்பசாமி
கிராம தெய்வங்களில் முதன்மையானவர் கருப்பசாமி. தலைப்பாகை அணிந்து, உக்கிர விழிகளுடன் ஏந்திய வீச்சரிவாளுமாக இவரின் தோற்றமே அத்தனை கம்பீரமானது.

கிராம தெய்வங்களில் முதன்மையானவர் கருப்பசாமி. தலைப்பாகை அணிந்து, உக்கிர விழிகளுடன் ஏந்திய வீச்சரிவாளுமாக இவரின் தோற்றமே அத்தனை கம்பீரமானது.
கல்வி, செல்வம், ஆரோக்கியம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் இருந்து வரும் நிலையில், இவை அத்தனையையும் உள்ளடக்கி காவல் தெய்வமாக பரிணமித்து வருகிறார் கருப்பசாமி. எளிமைக்கு பெயர் பெற்ற ஸ்தலம் இவருடையது. கோபுரம் இன்றி பல இடங்களில் வெட்டவெளியில் நின்று அருள்பாலிக்கிறார். இவரை தரிசிக்க நடைதிறப்பு என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பெரிய அளவிலான துதிப்பாடல்களோ, வழிபாட்டு முறைகளையோ இவர் எதிர்பார்ப்பதில்லை. மக்களின் மனோநிலைக்கு ஏற்ப படையலிட்டு இவரை வழிபட்டுச் செல்கின்றனர்.
What's Your Reaction?