கிறிஸ்துமஸ்: மாட்டுத் தொழுவத்தை தேர்ந்தெடுத்த மனுஷகுமாரன்!
ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹேம். இது யூதர்கள் பெரும்பான்மை யாக வசித்துவந்த யூதேயா தேசத்தில் இருக்கிறது. ரோம சாம்ராஜ்யத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அரசு நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.

ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹேம். இது யூதர்கள் பெரும்பான்மை யாக வசித்துவந்த யூதேயா தேசத்தில் இருக்கிறது. ரோம
சாம்ராஜ்யத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அரசு நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.
எத்தனை வரிகள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவும், குடும்பத்திலிருந்து ஒருவரையேனும் ராணுவத்துக்குக் கட்டாய ஆள் எடுப்பு செய்யவும் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதர்களுக்கு ராணுவத்தில் சேர்வதில் விருப்பமில்லை. அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விலக்கு பெற்றதற்காக அவர்கள் அதிக வரி செலுத்திவந்தனர்.
What's Your Reaction?